அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூரில் கனமழை- சென்னையில் மேகமூட்டம்: வானிலை மையம்
சென்னை: தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியால் அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரமணன், தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார். குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆந்திரா நோக்கி நகர்ந்து வருவதாக கூறியுள்ள ரமணன், திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரித்துள்ளார்.
தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து வருவதாக ரமணன் கூறியுள்ளார். சென்னையை பொறுத்த வரை மேகமூட்டம் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ரமணன் தெரிவித்தார்.
மேலும் அவர் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார். கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் ரமணன் எச்சரித்துள்ளார்.