மண்ணச்சநல்லூர் அருகே மனநலம் குன்றிய சிறுவனை கடத்த முயற்சி.. ஒருவர் கைது.. 6 பேருக்கு வலை
சிறுவனை கடத்த முயன்ற வடமாநில இளைஞரை பொதுமக்கள் விரட்டி பிடித்தனர்.
Recommended Video
திருச்சி: மண்ணச்சநல்லூர் அருகே மனநலம் குன்றிய சிறுவனை கடத்த முயன்ற வடமாநில இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.
மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பகுதி அக்கரைப்பட்டி. இங்கு ஒரு வீட்டிற்குள் புகுந்த 7 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்த ஒரு சிறுவனை கடத்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இந்த சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்டவன் என தெரிகிறது.
சிறுவன் தூக்கி செல்லப்படுவதை அறிந்த சிறுவனின் தாயார் கத்தி கூச்சலிட்டார். இதனால் அக்கம்பக்கத்தினர் விரைந்து ஓடிவந்து அந்த கும்பலை விரட்டி பிடித்தனர். ஆனால் கும்பலில் ஒருவர் மட்டுமே சிக்கியுள்ள நிலையில் மற்ற 6 பேரும் தப்பி தலைமறைவாகிவிட்டனர்.
பொதுமக்களிடம் சிக்கிய அந்த இளைஞனின் பெயர் நூர்முகம்மது என்றும், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த வடமாநில இளைஞரை பொதுமக்கள், போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனை தூக்கி செல்ல முயன்ற மற்ற 6 பேரையும் தேடி வருகின்றனர்.