வாவ்.. தமிழர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்.. உணர்ச்சி பெருக்கில் வட இந்தியர்கள்! #gobackmodi
ஒரு போராட்டத்தை எப்படி ஒற்றுமையாக நடந்த வேண்டும் என்பதை தமிழர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று வட இந்திய மக்கள் இணையத்தில் கருத்து தெரிவித்துள்ளனர்.
Recommended Video
சென்னை: ஒரு போராட்டத்தை எப்படி ஒற்றுமையாக நடந்த வேண்டும் என்பதை தமிழர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று வட இந்திய மக்கள் இணையத்தில் கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னையில் நடக்கும் ''டிஃபேஎக்ஸ்போ 2018'' எனப்படும் ராணுவ மற்றும் தொழில்நுட்ப கருத்தரங்கில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று சென்னை வந்தார். இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு எதிராக ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி சென்னை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ''கோ பேக் மோடி'' (#gobackmodi)என்ற ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்டிங்கில் முதல் இடம்பிடித்துள்ளது. இதில் காலையில் இருந்து டிவிட் செய்யப்பட்டு வருகிறது.
|
இரண்டு மாநிலம்
இவர் ''கேரளா முன்பு ''போ மோனே மோடி'' என்று எதிர்ப்பு தெரிவித்தது. தற்போது தமிழ்நாடு '' கோ பேக் மோடி'' என்றுள்ளது. அடுத்து கர்நாடகா இப்படி செய்ய வேண்டும்'' என்றுள்ளார்.
|
இலங்கையிலும்
இவர் ''ஸ்ரீலங்காவில் இருக்கும் தமிழன் என்ற முறையில் சொல்கிறேன். தமிழர்களின் பலமும் ஒற்றுமையும் வியக்க வைக்கிறது. தமிழனாக பெருமை கொள்ள வைத்துள்ளீர்கள்'' என்றுள்ளார்.
|
சிறப்பு
''கோ பேக் மோடியை வைரலாக்கியதன் மூலம் , தமிழர்கள் அவர்களின் ஒற்றுமையையும், அறிவையும் நிரூபித்துள்ளனர். அவர்களை வணங்குகிறேன்'' என்று இந்த வட இந்திய நெட்டிசன் கூறியுள்ளார்.
|
கற்றுக்கொள்ள வேண்டும்
இவர் ''தமிழ்நாட்டு மக்களை கண்டிப்பாக பாராட்ட வேண்டும். மற்ற மாநில மக்களை விட அவர்கள் வித்தியாசமாக இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்.'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.