தமிழகத்தில் 8ம் தேதி தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை.. வானிலை மையம் அறிவிப்பு!
தமிழகத்தில் வரும் 8 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
சென்னை: தமிழகத்தில் வரும் 8 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணம் வட இந்திய பகுதி மற்றும் கர்நாடகா கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களும் நல்ல மழையை பெற்றன.
குறிப்பாக கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கோர தாண்டவம் ஆடியது. இதனால் அம்மாநிலம் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு மற்றும் பேரழிவை சந்தித்தது.
[ வருது வருது.. புதுசா ஒரு காற்றழுத்தம் வங்கக்கடலில் வரும் 8ஆம் தேதி வருது.. வானிலை மையம் எச்சரிக்கை! ]
30ஆம் தேதியுடன் நிறைவு
இந்நிலையில் கடந்த 29 ஆம் தேதியுடன் தென்மேற்கு பருவமழை நிறைவடையும் என கூறப்பட்டது. ஆனால் கடந்த 30 ஆம் தேதிதான் தென்மேற்கு பருவமழை நிறைவடைந்தாக இந்திய வானிலை மையம் அறிவித்தது.
91% மட்டுமே பெய்துள்ளது
நாடு முழுவதும் வழக்கமான அளவைவிட குறைவான அளவே மழை பெய்து இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதாவது தென்மேற்கு பருவமழை 91 சதவீதம் மழைதான் பெய்துள்ளது. பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் மழை மிகவும் குறைவாக பெய்ததாக வானிலை மையம் தெரிவித்தது.
முழுவதுமாக விலகும்
இந்நிலையில் தென் மேற்கு பருவமழை வட இந்திய பகுதியில் இருந்து வரும் 8 ஆம் தேதிக்குள் முழுவதுமாக விலகும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
8ஆம் தேதி முதல் பருவமழை
இதனால் அடுத்த 3 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் உள்ளதாக கூறிய வானிலை மையம் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் 8ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் அறிவித்துள்ளது.