கடமை உணர்வு.. 1 ரூபாய் கடன் பாக்கியால் ரூ.3.50 லட்சம் நகையை திரும்ப தராத மத்திய கூட்டுறவு வங்கி!
வாங்கிய கடனில் ஒரு ரூபாயை திரும்ப கொடுக்கவில்லை என்று, சென்னையை சேர்ந்த நபருக்கு அவர் அடகு வைத்த நகைகளை திரும்ப கொடுக்க மத்திய கூட்டுறவு வங்கி மறுப்பு தெரிவித்துள்ளது.
Recommended Video
சென்னை: வாங்கிய கடனில் ஒரு ரூபாயை திரும்ப கொடுக்கவில்லை என்று, சென்னையை சேர்ந்த நபருக்கு அவர் அடகு வைத்த நகைகளை திரும்ப கொடுக்க காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் பல்லாவரம் கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.
சி குமார் என்ற நபர் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் பல்லாவரம் கிளையில் ரூ.3.50 லட்சம் மதிப்புள்ள நகைகளை அடகு வைத்து முதலில் ரூபாய் 1.23 லட்சம் பணத்தை கடனாக வாங்கியுள்ளார். அதன்பின் அதே நகைக்கு கூடுதலாக ரூபாய் 1.65 லட்சம் ரூபாய் பணம் கடனாக வாங்கியுள்ளார்.
இந்த கடன்களை கொஞ்சம் கொஞ்சமாக அடைத்தும் இருக்கிறார். இதனிடையில் 5 வருடங்களுக்கு முன்பு முழு கடனையும் வட்டியுடன் மொத்தமாக அடைத்துள்ளார்.
ஆனால் வங்கியில் அவரது நகைகளை திரும்ப கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும் கூடுதலாக 1 ரூபாய் கொடுத்தால்தான் நகை கிடைக்கும், ஆனால் ஒரு ரூபாயை சரியான காலத்திற்கு கொடுக்கவில்லை, இதனால் நகையை இனி திரும்ப மீட்க முடியாது என்று கூறியுள்ளனர்.
இதையடுத்து சி குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தொடுத்தார். இதை விசாரித்த நீதிமன்றம், லோன் குறித்த பிரச்சனையில் விளக்கம் அளிக்க வங்கி கிளைக்கு இரண்டு வாரம் அவகாசம் கொடுத்துள்ளது.