For Daily Alerts
Just In
நொய்யல் ஆற்றிலே நுரையுமில்லை... ஒரு குறையுமில்லை... அமைச்சரின் அடடே பேட்டி - வீடியோ
நொய்யல் ஆற்றிலே ஒரு நுரையுமில்லை... குறையுமில்லை என்று சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி கருப்பண்ணன் கூறியுள்ளார்.
திருப்பூர்: திருப்பூரில் நொய்யல் ஆற்று நீர் நுரைத்தபடி ஓடியது. இதனால் பொதுமக்கள் பலரும் அச்சமடைந்தனர். இது வெறும் சோப்புநுரைதான் என்று கூறியுள்ளார் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பண்ணன்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கருப்பண்ணன், திருப்பூர், கோவையில் நல்ல மழை பெய்துள்ளது. நொய்யல் ஆறில் தண்ணீர் நன்றாக ஓடுகிறது. ஆற்று நீர் நுரையுடன் ஓடியது ஏன் தெரியுமா? சாக்கடை நீர்கலக்கிறது. கூடவே வீடுகளில் நாம் சோப்பு போட்டு குளிக்கும் நீரும் இதில் கலக்கிறது, இதன் காரணமாகவே நுரை ஏற்பட்டுள்ளது கூறினார்.
அதோடு நொய்யல் ஆற்றிலே இப்போது ஒரு நுரையுமில்லை... குறையுமில்லை என்று கூறினார் அமைச்சர் கருப்பண்ணன்.
Comments
English summary
TamilNadu Environment minister Karuppanan says the soap water from houses mix up with Noyyal is the reason for foam in the river.