For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்.. சாராயக்கடை சூறை !

By Karthikeyan
Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரியில் சாராயக்கடையை அகற்றக்கோரி என்.ஆர்.காங்கிரஸ் என்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ அசோக் ஆனந்த் தலைமையில் ராஜீவ் காந்தி சதுக்கத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி மாநிலம் தட்டாம்பாளையம் - கவுண்டம்பாளைம் சாலையில் உள்ள சாராயக் கடையை அகற்றக் கோரி என்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ அசோக் ஆனந்த் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் ராஜீவ் காந்தி சதுக்கத்தில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

NR Congress party member protest at Pondicherry

இந்த ஆர்ப்பாட்டத்தால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனிடையே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் சாலை மறியலில் ஈடுபட்ட சிலர், சாராயக் கடையை அடித்து நொறுக்கினர்.

இதனால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது. பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் சென்னை - விழுப்புரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

English summary
NR Congress workers protest against liquor shop in Puducherry
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X