For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆர்.கே.நகர் தொகுதியில் நடப்பது தேர்தல் அல்ல.. யுத்தம்: சீமான் ஆவேசம்!

ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள இளைஞர்களே வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஆர்.கே.நகரில் தேர்தல் அதிகாரியை மாற்றியும் பயனில்லை என்று சீமான் கூறியுள்ளார். ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள இளைஞர்களே வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

டிசம்பர் 21ஆம் நாள் நடைபெற உள்ள ஆர்.கே நகர் இடைதேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் கா.கலைக்கோட்டுதயம் மெழுகுவர்த்திகள் சின்னத்தில் போட்டியிடுகிறார். இதனையொட்டி கடந்த டிசம்பர் 1ஆம் தேதி முதல் பிரச்சாரம் களைகட்டி வருகிறது.

NTK leader Seeman Election Campaign RK Nagar ByPoll

இன்று காலையில் காசிமேட்டில் சீமான் தனது கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயத்திற்கு ஆதரவாக வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ஒன்பது ஹெலிகாப்டர்களைக் கொண்டு தொலைந்துபோன மீனவர்களைத் தேடுகிறது கேரள அரசாங்கம். இங்கு தெருவுக்குத் தெரு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறார்கள் என்றார்.

விஷால் வேட்புமனு நிராகரிப்பு கேள்விக்குறியாகவே உள்ளது என்று கூறிய சீமான், ஆர்.கே.நகரில் தேர்தல் அதிகாரியை மாற்றியும் பயனில்லை என்றார். ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள இளைஞர்களே வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பார்கள் என்றும் சீமான் தெரிவித்தார். இந்த இடைத்தேர்தல் தேர்தல் மட்டுமல்ல ஒரு போர் என்றும் சீமான் கூறினார்.

English summary
NTK organiser Seeman has said that, no use is returning office change in RK Nagar. Seeman Election Campaign RK Nagar ByPoll for candidate Kalaikotuthayam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X