For Quick Alerts
For Daily Alerts
Just In
நாகை, எண்ணூர், கடலூர் புதுச்சேரி துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
நாகை, எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
Recommended Video
துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு- வீடியோ
சென்னை: நாகை, எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன்காரணமாக மும்பை முதல் தமிழகம் வரை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை கொட்டி வருகிறது.
நீலகிரி மாவட்டம் மற்றும் கோவை மாவட்டம் வால்பாறையில் 4வது நாளாக கனமழை கொட்டி வருகிறது. இந்நிலையில் நாகை, எண்ணூர், கடலூர், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
அதிக காற்று வீசும் என்பதால் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் கனமழை பெய்து வருவதால் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இருப்பினும் வங்கதேசத்தில் கனமழை பெய்வதால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Comments
English summary
Number one Cyclone warning cage has raised in Ennor, Nagai, Cuddalore harbors.