For Daily Alerts
Just In
தமிழகம் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
நாகை, கடலூர் உள்ளிட்ட தமிழக மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
சென்னை: நாகை, கடலூர் உள்ளிட்ட தமிழக மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வடமேற்கு வங்க கடல் பகுதியில் ஒடிசா அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியிருப்பதாக சென்னை வானிலை மையம் இன்று அறிவித்தது.
இந்நிலையில் நாகை, கடலூர், தூத்துக்குடி, பாம்பன், சென்னை எண்ணுர், காரைக்கால், புதுச்சேரி ஆகிய துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
ஒன்றாம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டால் புயல் உருவாகக்கூடிய வானிலை சூழல் உருவாகியுள்ளது என அர்த்தம். இதனால் துறைமுகம் ஏதும் பாதிக்கப்படவில்லை. ஆனால், பலமாக காற்று வீசுகிறது என்பதை குறிக்கும்.
Comments
English summary
Number one cyclone warning cage raised in Nagai, Cuddalore, Tuticorin, Chennai Ennore, Puducherry, Karaikkal harbors.
Story first published: Saturday, July 21, 2018, 18:00 [IST]