செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு.. பேச்சுவார்த்தைக்கு பிறகு அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு
செவிலியர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: செவிலியர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செவிலியர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
பணிநிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் செவிலியர்கள் இரண்டாவது நாளாக இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் செவிலியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருப்பதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் செவிலியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
20 பிரதிநிதிகள் பங்கேற்பு
இந்த பேச்சுவார்த்தை சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் செவிலியர்கள் தரப்பில் இருந்து 20 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
வாபஸ் பெற அறிவுரை
இந்நிலையில் பேச்சுவார்த்தைக்குப் பிறகு அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது போராட்டத்தை வாபஸ் பெற செவிலியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
ஊதியம் உயர்த்தி வழங்கப்படும்
நல்ல முடிவு எடுப்பார்கள் என்று அரசு எதிர்பார்க்கிறது என்றும் அவர் கூறினார். செவிலியர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என பேச்சுவார்த்தையின் போது கூறியதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
கால அவகாசம் தேவைப்படுகிறது
மத்திய அரசிடம் அனுமதி பெற்றுத்தான் பணி நிரந்தரம் செய்ய முடியும் என்றும் அவர் கூறினார். செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய கால அவகாசம் தேவைப்படுகிறது என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.