For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரதமர் மோடியின் அறிவுறுத்தலில்தான் துணை முதல்வரானேன்: ஓபிஎஸ் பகிரங்க ஒப்புதல் வாக்குமூலம்

பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலாலேயே கட்சியில் மீண்டும் சேர்ந்ததாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    பிரதமர் சொல்லித்தான் செய்தேன்-ஓபிஎஸ்- வீடியோ

    தேனி : பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலாலேயே கட்சியில் மீண்டும் இணைந்ததாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அமைச்சர் பதவி வேண்டாம் என்று சொன்ன போதும் பிரதமர் கூறியதாலேயே தற்போது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா கொண்டாடுவது குறித்த ஆலோசனைக்கூட்டம் தேனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கம்பம் எம்.எல்.ஏ ஜக்கையன், தேனி எம்.பி.பார்த்திபன், முன்னாள் எம்.பி சையதுகான் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பகிரங்கமாக சில உண்மைகளை ஒப்பு கொண்டுள்ளார். அதில் பாரத பிரதமரை மரியாதை நிமித்தமாக நான் சந்தித்தேன்.

    பிரதமர் கூறியதால்

    பிரதமர் கூறியதால்

    அப்போது பிரதமர் என்னிடம் சொன்னது என்னவென்றால் நான் சென்னையில் நான் ஜெயலலிதாவை சந்தித்து அவர் என்னிடம் நிறைய பேசி இருக்கிறார். இப்போது இருக்கும் சூழ்நிலையில் கட்சியை காப்பாற்றுவதற்கு நீங்கள் இணைய வேண்டும் என்று சொன்னார்.

    கட்சிப்பதவியே போதும் என்றேன்

    கட்சிப்பதவியே போதும் என்றேன்

    நானும் சரி என்று ஒப்புகொண்டேன். ஆனால் எனக்கு மந்திரி பதவி வேண்டாம் கட்சியில் மட்டுமே பதவி வேண்டும் என்று சொன்னேன்.

    பிரதமர் வற்புறுத்தலால்

    பிரதமர் வற்புறுத்தலால்

    ஆனால் பிரதமர் இல்லை, இல்லை நீங்கள் அமைச்சரவையில் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று என்னிடம் கூறினார். அதனால் தான் நான் துணை முதல்வர் பொறுப்பில் இருக்கிறேன்.

    அமைச்சர்களும் ஆதரித்தனர்

    அமைச்சர்களும் ஆதரித்தனர்

    நான் பிரதமர் சொன்னது குறித்து என்னுடைய சக அமைச்சர்களான வேலுமணி, தங்கமணியிடம் சொன்னேன். அவர்களும் நீங்கள் எங்களுடன் அமைச்சரவையில் இருக்க வேண்டும் என்று சொன்னார்கள்.

    2 முறை முதல்வராக இருந்திருக்கிறேன்

    2 முறை முதல்வராக இருந்திருக்கிறேன்

    இவர்கள் அனைவரும் சொன்னதால் தான் நான் அமைச்சராக இருக்கிறேன், மற்றபடி எனக்கு அமைச்சராகும் ஆசையெல்லாம் இல்லை. இரண்டு முறை ஜெயலலிதா என்னை முதல்வராக்கி இருக்கிறார் அந்த பெருமையே எனக்கு போதும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

    English summary
    Deputy CM O.Paneerselvam says that he rejoin in admk after PM's advice only and also adds he is not interested in cabinet but took deputy CM charge after PM's guidance.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X