தினகரனை என்னுடன் இருந்தவர்களுக்கே தெரியாமல் ரகசியமாக சந்தித்தேன்.. உண்மையை வெளிப்படுத்திய ஓபிஎஸ்
Recommended Video
சென்னை: டிடிவி தினகரனை நான் சந்தித்து குறித்து எனக்கு நெருக்கமானவர்களுக்கு கூட தெரியாது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.
இன்று நிருபர்களிடம் பேட்டியளித்தபோது, ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது: 2017ம் ஆண்டு, ஜூலை 12ம் தேதி டிடிவி தினகரனை சந்தித்தது உண்மைதான். அப்போது நான் தர்மயுத்தம் நடத்தி வந்தேன். எனவே அவரை சந்திக்க கூடாது என்று நினைத்தேன். ஆனால் நூறு முறையாவது எனக்கு அழைப்பு வந்தது. எனவே மரியாதை நிமித்தமாக நான் சந்தித்தேன். இது எனது உடன் இருந்தவர்களுக்கு கூட தெரியாது.
[நான் ஏன் எடப்பாடி பழனிச்சாமி அணியோடு இணைப்புக்கு சம்மதித்தேன்.. மனம் திறந்த ஓபிஎஸ்]
ஆனால், அவர் கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன்தான் பேசினார். எனவே நான் அவரை விட்டு விலகி வந்துவிட்டேன்.
இதற்கு அடுத்த மாதம்தான் அதிமுக இணைப்பு நடைபெற்றது. அதன்பிறகு தினகரனுடன் எனக்கு தொடர்பே இல்லை.
தினகரன் தரப்பு அளித்த பிரஸ் மீட்டையடுத்து, தினகரனுடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவர் இன்று, என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். சின்னத்தனமாக அரசியல் செய்வார்கள் என எனக்கு தெரியாது என்று அந்த நபர் என்னிடம் வருத்தம் தெரிவித்தார். இவ்வாறு ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.