முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒடிஷா முதல்வர் நவீன்பட்நாயக் வாழ்த்து!
சென்னை: தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற ஜெயலலிதாவுக்கு ஒடிஷா முதல்வர் நவீன்பட்நாயக் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து கடந்த 11-ந் தேதி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து கடந்த 23-ந் தேதி ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக 5 வது முறையாக பதவியேற்றுக் கொண்டார்.
முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்ட ஜெயலலிதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் அனுப்பியுள்ள வாழ்த்து கடிதத்தில், நீங்கள் தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டதற்கு வாழ்த்துகள். உங்கள் தலைமையின் கீழ் தமிழகம் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும் என நம்புகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.