For Daily Alerts
Just In
நாகை விபத்து எதிரொலி: பழைய பணிமனைகளை ஆய்வு செய்த அதிகாரிகள் - வீடியோ
நாகை மாவட்டம் பொறையாரில் உள்ள அரசு போக்குவரத்து கழக கட்டிடம் நேற்று அதிகாலையில் இடிந்து விழுந்தது. இதில், 8 பேர் உயிரிழந்தனர். 3 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து முதல்வரிடம் போக்குவரத்துதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்தார். இதுபோன்று விபத்துக்கள் ஏற்படாத வகையில், தமிழகம் முழுவதும் உள்ள பழமையான பணிமனை கட்டிடங்கள் கண்டறியப்பட்டு, புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
அமைச்சரின் உத்தரவுபடி அரசு போக்குவரத்து பணிமனை கட்டிடங்களை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
Comments
English summary
Porayar bus depot roof collapse officers has inspection bad condition of building.Eight Tamil Nadu State Transport Corporation (TNSTC) employees in a roof collapse at a bus depot at Porayar in Nagapattinam district.