கடலூர் அருகே பயங்கரம்: வீட்டுமனை பிரச்சனை காரணமாக மூதாட்டி அடித்து கொலை - 2 பேர் படுகாயம்
வீட்டுமனை தகராறு காரணமாக வயதான பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
கடலூர்: கடலூர் அருகே வீட்டுமனை தகராறு காரணமாக மூதாட்டி ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த கணபதிகுறிச்சியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவருக்கும் உறவினரான ராமசாமிக்கும் வீட்டு மனை தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில் நேற்றிரவு இது தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ராமசாமியின் மகன் பச்சையப்பன் 25, ராஜமாணிக்கத்தின் மனைவி ராசாத்தி, மருமகள் தேவி, தேவியின் மகள் தேசா ஆகியோரை உருட்டைக்கட்டையால் தாக்கினார். ஆத்திரம் தீராமல் பச்சையப்பன் வீட்டையும் கொளுத்தினார்.
படுகாயமடைந்த அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் ராசாத்தி, மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
படுகாயமடைந்த ராஜமாணிக்கத்தின் குடும்பத்தினர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து பச்சையப்பனை தேடி வருகின்றனர்.