For Daily Alerts
Just In
மூளைச்சாவடைந்தும் 6 பேருக்கு மறுவாழ்வு அளித்த முதியவர்- சென்னையில்!
சென்னை: சென்னையில் மூளைச்சாவு அடைந்த முதியவர் ஒருவரின் உடல் உறுப்புகள் கிட்டதட்ட 6 பேருக்கு தானமாக அளிக்கப்பட்டன.
சென்னை, அம்பத்தூர் விஜயலட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் வரதன். இவருக்கு உயர் ரத்த அழுத்தம் காரணமாக மூளையில் ரத்தக் கசிவு ஏறபட்டது. இதையடுத்து அவர் போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் அண்மையில் சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில் அவர் மூளைச்சாவு அடைந்ததை அக்டோபர் 24 இல் மருத்துவர்கள் உறுதி செய்தனர். அவரது உடல் உறுப்புகளை தானமளிக்க அவரது மனைவி பிரபா சம்மதம் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து அவருடைய கல்லீரல், சிறுநீரகங்கள், இருதய வால்வுகள், கண்கள் ஆகிய ஆறு உறுப்புகள் அவரிடம் இருந்து தானமாகப் பெறப்பட்டன. இவை அனைத்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கே பொருத்தப்பட்டன. இதையடுத்து 6 பேர் அவரால் மறுவாழ்வு பெற்றனர்.
English summary
Chennai old man's organs donated to 6 people, hence he was brain dead.
Story first published: Tuesday, October 27, 2015, 15:05 [IST]