ஏப்ரல் 1முதல் குடும்ப அட்டைகளுக்கு ஸ்மார்ட் கார்டு.. அமைச்சர் காமராஜ் அறிவிப்பு
ஏப்ரல் ஒன்றம் தேதி முதல் குடும்ப அட்டைகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஏப்ரல் ஒன்றம் தேதி முதல் குடும்ப அட்டைகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டால் உரிய நேரத்தில் ரேஷன் பொருட்கள் கிடைக்கும் என்றும் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வெளியான தகவலை அவர் மறுத்தார்.
பொது விநியோகத்திட்டத்தின் கீழ் விலையில்லாப் பொருட்கள் தொடர்ந்து வழங்கப்படும் என்றார். மேலும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் குடும்ப அட்டை தாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுவிட்டால் உரிய நேரத்தில் ரேஷன் பொருட்கள் கிடைக்கும் என்றும் உணவுத்துறை அமைச்சர் காமாராஜ் தெரிவித்தார்.