ஓணம் பண்டிகை... செப்.4ல் சென்னையில் உள்ளூர் விடுமுறை
ஓணம் பண்டிகையை முன்னிட்டு, வரும் செப்டம்பர் 4ஆம் தேதி சென்னையில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: மலையாள மொழி பேசும் மக்களின் திருவிழாவான ஓணம் பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''ஓணம் பண்டிகையை முன்னிட்டு 4ஆம் தேதி திங்கட்கிழமையன்று சென்னை மாவட்டத்துக்கு அரசு ஆணைப்படி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
உள்ளூர் விடுமுறைக்குப் பதில் சனிக்கிழமை சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் உள்ளூர் விடுமுறை நாளான செப்டம்பர் 4ஆம் தேதி அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களைக் கொண்டு பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாதவாறு செயல்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.