For Daily Alerts
Just In
ஆவடி அருகே பரிதாபம்.. 100 கிலோ உடல் எடையை குறைக்க லேகியம் வாங்கி சாப்பிட்டவர் பலி
சென்னை அருகே உடல் எடையை குறைப்பதற்காக லேகியம் சாப்பிட்டவர் பலியானார்.
சென்னை: சென்னை ஆவடி அருகே உடல் எடையை குறைப்பதற்காக சாலையோர கடையில் லேகியம் வாங்கி சாப்பிட்டவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருமுல்லைவாயில் அருகே அய்யப்பாக்கத்தை சேர்ந்த பிரத்திப் என்பவர் 100 கிலோ உடைய இவர், தனது உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக வீட்டின் அருகே உள்ள சாலையோர கடையில் லேகியம் வாங்கி சாப்பிட்டுள்ளார்.
லேகியம் உண்டதை அடுத்து பிரத்திப்பிற்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
பிரத்திப் உயிரிழந்ததை அறிந்த அந்த லேக்கியம் விற்ற நபர் தலைமறைவாகி விட்டார். இந்த தகவல் அறிந்த திருமுல்லைவாயில் காவல்துறையினர் உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments
English summary
one dead who eaten roadside herbal medicine near Avadi. Pradeep, who weighed 100kg, died of stomach pain due to eating the roadside medicine.
Story first published: Thursday, March 29, 2018, 17:29 [IST]