லஞ்சம், ஊழல் என்பது இவர்களுக்கு உடம்பில் ஊறி விட்டது.. குமுறும் மக்கள்!
பெங்களூரு சிறையில் சசிகலா எந்த கட்டுப்பாடுகளும் இன்றி இருப்பது அம்பலமாகியுள்ள நிலையில் அவரை திகார் சிறைக்கு மாற்ற வேண்டும் என்று கருத்து அதிகரித்துள்ளது.
சென்னை: பெங்களூரு சிறையில் சசிகலா எந்த கட்டுப்பாடுகளும் இன்றி இருப்பது அம்பலமாகியுள்ள நிலையில் அவரை திகார் சிறைக்கு மாற்ற வேண்டும் என்று கருத்து ஓங்கியுள்ளது.
சசிகலாவுக்கு சிறையில் அளிக்கப்பட்டுள்ள வசதிகள் வீடியோவாக வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளன. ஆனபோதும் அதனை அவரது ஆதரவாளர்கள் மறுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சசிகலாதான் தமிழக சிறைக்கு தன்னை மாற்ற வீடியோக்களை வெளியிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அதேநேரத்தில் சிறை அதிகாரிகளுக்கே லஞ்சம் கொடுத்த சசிகலாவை திகார் சிறைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.
திகாருக்கு அனுப்ப வேண்டும்
சந்துரு என்பவர் பதிவிட்டுள்ள கமென்ட்டில் ஏன் இன்னும் விட்டு வைத்திருக்கிறார்கள். திகாருக்கு அனுப்ப வேண்டும் என கூறியுள்ளார்.
தனிமை படுத்த வேண்டும்.
அலீம் என்பவர் பதிவிட்டுள்ள கருத்தில், மீண்டும் ஊழல் செய்ததை குற்றமாக கருதி, இதற்கு மேலும் சில வருடம் தண்டனை கொடுக்க வேண்டும். இல்லையெனில், டெல்லி திஹார் சிறையில் தனிமை படுத்த வேண்டும். லஞ்சம், ஊழல் என்பது இவர்களுக்கு உடம்பில் ஊறி விட்டது எனக் கூறியுள்ளார்.
வீடியோ லீக் என்பதே சதி தான்
ராம் என்பவர் தனது கருத்தில் இந்த வீடியோ லீக் என்பதே சதி தான். இதை வைத்து இவரை வேறு சிறைக்கு மாற்றப்போகிறோம் என்று ஆளும் காங்கிரஸ் அரசு சொல்லும்.அப்போது தமிழக சிறைக்கு மாற்றுமாறு வேண்டுகோள் விடுப்பார்கள். பணம் கைமாறும்...நினைத்ததை சாதிப்பார்கள்.. என பதிவிட்டுள்ளார்.
நியாயம் நிச்சயம் ஜெயிக்கும்?
கேபி என்பவர் சசிகலா காத்திருங்கள், சித்தராமையா அவர்கள் நியமித்த விசாரணை அதிகாரி இன்னும் 3 அல்லது 4 நாட்களுக்குள் உங்கள் செல்லில் வந்து ஆய்வு செய்யும் போது நீங்க மாட்டுவீங்க..ரூபா அவர்கள் புகார் செய்த அன்றிரவே சிறைக்குள் சென்று ஏன் ஆய்வு நடத்த வில்லை ; சசி ஆதாரங்களை அழித்த பின் , சசி அனுமதி கொடுத்த பின், சிறையில் போய் ஆய்வு செய்யுங்கள் ; நியாயம் நிச்சயம் ஜெயிக்கும்? என கூறியுள்ளார்.