For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிறந்த நாடும் பெண்பாலே! இனிதாய்-நாம் பேசும் மொழியும் பெண்பாலே!!

பெண்குழந்தைகள் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

Google Oneindia Tamil News

சென்னை: பெண்குழந்தைகள் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

பெண்களின் உரிமைகளை எடுத்துரைக்கவும் அவர்களின் சுதந்திரத்தை நிலைநாட்டவும் ஐநா சபை 2011ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 11ஆம் தேதியை உலக பெண் குழந்தைகள் தினமாக அறிவித்தது.

அதன்படி இன்று உலக பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் இருந்து நமது ஒன் இந்தியா வாசகர் எழுதியுள்ள கவிதையில்..

One india Tamil reader has write a poem about world female baby day

பிறந்த நாடும்
பெண்பாலே !...
இனிதாய்-நாம்
பேசும் மொழியும்
பெண்பாலே!!....

தாங்கும் பூமியும்
பெண்பாலே-அழகு
ஓங்கும் இயற்கையதும்
பெண்பாலே....

பெண் குழந்தையே
பூமியின் வரம் !....
அவளின்றியும் உண்டோ
இப்பூமியில் தரம் ?.....

மழலையாய் பெண்
பிறந்தால் மகிழ்வோம்!...
மானுடம் அவளால்
செழிக்குமென நெகிழ்வோம்!!....

கள்ளிப்பாலுக்கு தீ
வைப்போம் !
அவளுக்கு
கரும்பலகையில்
கல்வி போதிப்போம்!!.

மொட்டுக்களை
கசக்கும் - பாலியல்
மோசங்களை
ஒழிப்போம்!-பெண்
தேவதைகளுக்கும்
சமஉரிமை சமுதாயத்தில்
அளிப்போம் !!...

- கவிஅன்பு
விழைவுப்பூக்கள் சேவை அமைப்பு,
தூத்துக்குடி

English summary
World female baby day celebrates today. One india Tamil reader has write a poem about it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X