For Quick Alerts
For Daily Alerts
Just In
காற்றில் கரைந்த ஏழை ஞானியும், ஏழை அனிதாவும்... வாசகரின் கவிதை
சென்னை: மாணவி அனிதா போல நீட் தேர்வால் பாதிக்கப்பட்டுள்ள பல மாணவ, மாணவிகள் நலன்காக்க உங்கள் யோசனையை கூறுங்கள் என 'ஒன்இந்தியாதமிழ்' தனது வாசகர்களிடம் கேட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து வாசகர்கள் தங்கள் கருத்துகளை குறிப்பிடப்பட்ட இமெயில் முகவரிக்கு அனுப்பியுள்ளனர். அதில் ஏராளமானோர் தமிழக அரசுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.
மேலும் நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். வாசகர்களின் கருத்துகளில் அனிதாவுக்காக சிங்கப்பூரைச் சேர்ந்த வாசகர் ஜெயக்குமார் எழுதிய கவிதை:
கனவு காண சொன்ன
ஏழை ஞானியும்
கனவில் வாழ்ந்த
ஏழை அனிதாவும்
காற்றில் கரைந்து ...
காலை விடிந்ததும்
கனவினை கலைத்து விடுங்கள்
இது நமக்கான
தேசமல்ல ...
Comments
English summary
Readers of One India's comments on Anitha's issue gave suggestion. Reader from Singapore sent poem for Anitha.