#வாதம் விவாதம்: ''நிச்சயம் மறுபடி ஒர் தர்மயுத்தம் இருக்கு''
இரட்டை இலை சின்னம் மீண்டும் கிடைத்த பின்னர் எடப்பாடி பழனிச்சாமி அணி கொண்டாடிய விழாவில் ஓ.பன்னீர்செல்வம் புறக்கணிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து பிபிசி தமிழின் வாதம் விவாதம் பகுதியில், சமூக வளைத்தல நேயர்களிடம் 'கூட்டுத் தலைமையில் அதிமுக இயங்க முடியவில்லையா? அதிகாரத்திற்கான சமரசம் செய்து கொண்டார்களா?' என்ற கேள்விக்கு அவர்கள் பதிவிட்ட முக்கியமான கருத்துக்களை தொகுத்து வழங்குகிறோம்.
''நிச்சயம் மறுபடி ஓர் தர்மயுத்தம் இருக்கும் என எதிர்பார்க்கலாம்'' என ரமேஷ் பதிவிட்டுள்ளார்.
''நிச்சயமாக கூட்டு தலைமையில் அவர்கள் இணைந்து செயல்பட முடியாது. வெறும் பதவிக்காக சமரசம் செய்து வைக்கப்பட்டுள்ளனர். அதிமுக விசயத்தில் மத்திய அரசு எதை செய்யவேண்டும் என திட்டமிட்டதோ அதை கிட்டத்தட்ட செய்து விட்டது. அடுத்த சட்டமன்ற தேர்தலில் ஈ பி எஸ் தலைமையிலான அதிமுக கட்சி இருப்பது சந்தேகமே. என பீர் முகமது கூறியுள்ளார்.
''இரட்டை இலை சின்னம் கொண்டாட்டத்தில் ஓபிஎஸ் புறக்கணிக்கப்படவில்லை ஒதுக்கப்பட்டுல்லார்,கூட்டுத்தலைமையில் அதிமுக இயங்குவது கஷ்டம்'' என்கிறார் தமிழ்.
''இரட்டை இலை வாங்கினாலும்சரி ஒத்தஇலை வாங்கினாலும் சரி இந்த தேர்தலோட உங்களுக்கு முடிவு கட்டிருவோம்'' எனக்கூறியுள்ளார் ராமகிருஷ்ணன்
''இரட்டை இலையை மீட்பதற்காக தான் ஓபிஎஸ்ஸை இபிஎஸ் சேர்த்துக்கொண்டார் இப்போது இரட்டை இலை கிடைத்துவிட்டது இனி ஓபிஎஸ் தேவையில்லை என்று நினைத்துவிட்டார் ,அரசியலில் இதுவெல்லாம் சர்வ சாதரணம்!!'' எனக்கூறியுள்ளார் பாஷா
பிற செய்திகள்: