ஒரு மெட்ரோ ரயிலால் 600 டூவிலர்களின் இயக்கம் குறையும்.. வெங்கய்ய நாயுடு
ஒரு மெட்ரோ ரயில் இயக்கத்தால் 600 டூவிலர்களின் இயக்கங்கள் குறைந்து சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறை வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
சென்னை: ஒரு மெட்ரோல் ரயில் மூலமாக, 600 இரு சக்கர வாகனங்களின் பயன்பாட்டை குறைக்க முடியும் என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
திருமங்கலம்- நேரு பூங்கா இடையே சுரங்க மெட்ரோ ரயில் முதல்முறையாக தொடங்கப்பட்டது. இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவும் திருமங்கலம் ரயில் நிலையத்தில் தொடங்கி வைத்தனர்.
விழாவில் அமைச்சர் வெங்கய்ய நாயுடு பேசுகையில், தமிழக அரசுக்கு மத்திய அரசு எல்லா உதவிகளையும் செய்யும். அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் இந்த சுரங்க மெட்ரோ ரயிலில் உள்ளது. டிக்கெட் வழங்கும் கருவிகள் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ளன.
சென்னை மக்களுக்கு வசதியான பயணத்தை மெட்ரோ ரயில் வழங்கும். சென்னை மெட்ரோ ரயில் மூன்றாம் கட்ட பணிக்கு ஒப்புதல் வழங்க பரிசீலிக்கப்படும். மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளை மாநில அரசு அறிமுகப்படுத்த வேண்டும்.
ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்பட்டால் 16 பஸ்கள், 300 கார்கள், 600 இரு சக்கர வாகனங்களின் பயன்பாடு குறைக்கப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்றார் அவர்.