For Daily Alerts
Just In
ராமமோகன ராவ் பேட்டி: நளினி சிதம்பரம் கருத்து சொன்னதாக தவறான செய்தி
ராமமோகன ராவ் பேட்டி தொடர்பாக பிரபல வழக்கறிஞர் நளினி சிதம்பரம் கருத்துக் கூறியதாக தவறான செய்தி வெளியாகி விட்டது.
சென்னை: முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் பேட்டி தொடர்பாக பிரபல வழக்கறிஞர் நளினி சிதம்பரம் கருத்து சொன்னதாக வந்த செய்தி தவறு. அவர் கருத்து எதுவும் கூறவில்லை.
ராமமோகன ராவ் இன்று செய்தியாளர்களுக்கு ஒரு பேட்டி அளித்தார். இதுதொடர்பாக ஊடகங்களுக்கு பல்வேறு தலைவர்களும் கருத்து தெரிவித்திருந்தனர். அந்தவகையில் வழக்கறிஞர் நளினி ஸ்ரீதர் என்பவரும் கருத்து கூறியிருந்தார். ஆனால் நளினி ஸ்ரீதர் பெயருக்குப் பதிலாக பிரபல வழக்கறிஞர் நளினி சிதம்பரம் கருத்து தெரிவித்ததாக ஒன்இந்தியா உள்ளிட்ட ஊடகங்களில் தவறான செய்தி வெளியானது.
ஆனால் அவர் அப்படி கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. தவறான செய்திக்கு வருந்துகிறோம்.
Comments
English summary
Oneindia Tamil had carried a news item on Ramamohana Rao and it was wrongly mentioned famous advocate Nalini Chidambaram's name. We regret for the mistake.
Story first published: Tuesday, December 27, 2016, 19:08 [IST]