தமிழகம் முழுவதும் மறியல் போராட்டங்கள்- ரயில்கள் நிறுத்தம், பல்லாயிரக்கணக்கானோர் கைது
சென்னை தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் எதிர்க்கட்சியினர் மறியலில் ஈடுபட்டதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Recommended Video
சென்னை: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் எதிர்க்கட்சியினர் மறியலில் ஈடுபட்டதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரயில் மறியலில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டம் காரணமாக பல இடங்களில் ரயில்கள் மறிக்கப்பட்டுள்ளன.
திருநெல்வேலி தாமிரபரணி ஆற்று ரயில் பாலத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. இதே போன்று கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கிள்ளை ரயில் நிலையத்தில் மயிலாடுதுறை - விழுப்புரம் பயணிகள் ரயிலை மறித்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
மறியலில் ஈடுபட்ட திமுக, காங்., விவசாயிகள் உள்ளிட்ட 250 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதேபோல் திருச்சி - லால்குடி ரயில் நிலையத்தில் மதுரை - சென்னை ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட திமுக.,வினர் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
அரியலூ மாவட்டம் செந்துறை அருகே மாத்தூரில் கடலூர்-திருச்சி பயணிகள் ரயிலை மறித்து திமுக.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே சென்னை பூங்கா நகர் ரயில் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.
மார்க்சிஸ்ட் கட்சியினர் மறியலால் புறநகர் ரயில் உட்பட 3 ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. இதேபோல் கோவையிலும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.