ஜான்பாண்டியன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதற்கு எதிர்ப்பு.. 12 பேருந்துகள் மீது தாக்குதல்
தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியனின் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் பல பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
Recommended Video
நெல்லை: தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியனின் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் பல பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நெல்லையில் உள்ள தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் வீட்டில் இரண்டு நாட்கள் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.நெல்லை பாளையங்கோட்டை மனக்காவலம் பிள்ளை நகரில் உள்ள அவரது வீட்டில் குண்டு வீசப்பட்டது.
இரண்டு பேர் பைக்கில் வந்து குண்டை எறிந்துவிட்டு தப்பித்து சென்று இருக்கிறார்கள். இந்த சம்பவத்தில் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு மாநில இளைஞர் அணி தலைவர் கண்ணபிரான் என்ற நபர் நேற்று போலீசால் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் ஜான்பாண்டியனின் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் பல பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக, 12 பேருந்துகள் கல்வீசி தாக்கப்பட்டது.
இதனால் பெரும்பாலான வெளியூர் செல்லும் பேருந்துகள் சேதம் அடைந்தது. இதனால் அங்கு பேருந்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.