மோடி பற்றி ஓபிஎஸ் திடீரென பேசுவது ஏன்? தினகரன் வெளியிட்ட திடுக் தகவல்
தற்போது முதல்வர் பதவிக்கு ஓபிஎஸ் அடம்பிடிக்கிறார் என்று ஆர்.கே நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி அளித்து இருக்கிறார்.
Recommended Video
சென்னை: தற்போது முதல்வர் பதவிக்கு ஓபிஎஸ் அடம்பிடிக்கிறார் என்று ஆர்.கே நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி அளித்து இருக்கிறார்.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு பதவி ஏற்று ஒருவருடம் ஆகிவிட்டது. அதேபோல் ஓபிஎஸ், எடப்பாடி அணிகள் இணைந்தும் ஒரு வருடம் ஆகப்போகிறது. ஓபிஎஸ் துணை முதல்வர் பதவி வகித்து வருகிறார்.
தற்போது தினகரன் அணியில் மேலும் ஒரு எம்.எல்.ஏ சேர்ந்துள்ளார். தமிழக அரசின் நிலைகுறித்து ஆர்.கே நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரன் பேட்டி அளித்து இருக்கிறார்.
அதில் ''பன்னீர் செல்வம் தற்போது முதல்வர் பதவி கேட்கிறார். அணிகள் இணைந்து ஓராண்டு ஆகிவிட்டதால் முதல்வர் பதவிக்கு ஓபிஎஸ் அடம்பிடிக்கிறார்'' என்றுள்ளார்.
மேலும் ''முதல்வர் பதவி கிடைக்காத விரக்தியில் மோடி கூறியதால் துணை முதல்வரானதாக கூறுகிறார். முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட 6 பேரை தவிர அனைத்து எம்எல்ஏக்களும் எங்கள் அணியில் சேர இருக்கிறார்கள்.'' என்றுள்ளார்.
மேலும் ''எம்எல்ஏக்கள் பலர் என்னுடன் தொடர்பில் உள்ளனர். சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஸ்லீப்பர் செல்கள் வெளியே வருவார்கள்'' என்றுள்ளார்.
அதேபோல் ''அனைத்துக்கட்சி கூட்டம் வரவேற்கத்தக்கதுதான். ஆனால் சட்டசபையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றியிருந்தால் இன்னும் வலிமையானதாக இருந்திருக்கும். '' என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.