For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பொன் ராதாகிருஷ்ணனுடன் 10 நிமிடம் ஓபிஎஸ் தனியாக பேசியது என்ன?

சென்னை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனுடன் துணை முதல்வர் ஓபிஎஸ் 10 நிமிடம் தனியாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர், அமைச்சர்கள் யாரும் உடன் இல்லாமல் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனுடன் பத்து நிமிடங்கள் தனியாக பேசிக்கொண்டிருந்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம். விமான நிலையத்தில் இருவரும் நின்று கொண்டே பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பல நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழகம் வந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு டெல்லி திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் ஆகியோர் பூங்கொடுத்து கொடுத்து வழியனுப்பி வைத்தனர். அப்போது முதல்வர் துணை முதல்வருடன் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பேசினார்.

OPS meets Pon Radhakrishnan

வெங்கையா நாயுடு சென்ற உடன் அமைச்சர்கள், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் சென்று விட்டனர். ஆனால் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுடன் தனியாக பேசிக்கொண்டிருந்தார். இருவரும் நின்று கொண்டே பத்து நிமிடங்கள் வரை பேசிக்கொண்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

English summary
Deputy Chief Minister O Panneerselvam has met union minister and senior BJP leader Pon Radhakrishnan for 10 minutes in Chennai airport.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X