சபாநாயகர் தனபாலிடம் நலம் விசாரித்தார் ஓபிஎஸ்
சட்டசபை சபாநாயகர் தனபாலிடம் உடல் நலம் குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் விசாரித்தார்.
சென்னை: உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சபாநாயகர் தனபாலிடம் ஓ.பன்னீர் செல்வம் நலம் விசாரித்தார்.
தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை அதிகாலை சபாநாயகர் தனபாலுக்கு காய்ச்சல் மற்றும் வயிற்று வலி ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்றைய தினம் மாலையே அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.
இதனால் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை பேரவையை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நடத்தினார். உடல் நலம் பெற்றதால் மருத்துவமனையில் இருந்து தனபால் நேற்று மாலை வீடு திரும்பினார்.
இன்று வழக்கம்போல் சட்டசபைக்கு வந்த அவரை முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் சந்தித்து பேசினார். பின்னர் அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார்.