For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ.வுக்கு ராசியான கோட்டூர்புரம் பிள்ளையாரை வழிபட்ட ஓபிஎஸ்

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் உடனான சந்திப்பு முடிந்து வீடு திரும்பிய போது முதல்வர் ஓபிஎஸ், கோட்டூர்புரத்தில் உள்ள பிள்ளையாரை வணங்கினார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: கோட்டூர்புரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பையொட்டிய பகுதியில் வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஜெயலலிதா அடிக்கடி வந்து செல்வார். இந்த சாலை வழியாக செல்லும் போதும் நிறுத்தி வணங்கி செல்வார்.

OPS prays Kotturpuram Vinayagar temple

பெங்களூருவில் சிறையில் இருந்து வீடு திரும்பும் போதும் சில நிமிடங்கள் இந்த கோவிலில் நிறுத்தி வணங்கிவிட்டே வீடு திரும்பினார். இந்த நிலையில் இன்று ஆளுநரை சந்திக்கப் போன ஓ.பன்னீர் செல்வம், கோட்டூர்புரம் விநாயகரை சந்தித்து விட்டு வீடு திரும்பினார்.

ஆளுநரை சந்தித்த பின் தனது வீட்டுக்கு திரும்பிய ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் பேசும் போது, நல்லது நடக்கும், தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும், ஆனால் தர்மம் மீண்டும் வெல்லும் என்றும் நம்பிக்கையோடு கூறியுள்ளார். வரசித்தி விநாயகர் வரம் கொடுப்பாரா பார்க்கலாம்.

English summary
O.Panneerselvam offer prayer Kotturpuram Vinayagar Temple.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X