For Daily Alerts
Just In
முதல் சான்ஸ் தர வேண்டும்.. ஓ.பி.எஸ் கோரிக்கையை நிராகரித்த ஆளுநர்
சென்னை: நான் தற்போது முதல்வராக இருப்பதால் எனக்கே பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வாய்ப்பு தர வேண்டும் என்று பொறுப்பு ஆளுநரிடம் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரியிருந்தார். ஆனால்அதை ஆளுநர் நிராகரித்து விட்டார்.
மிகவும் பலவீனமான நிலையில்தான் ஓ.பி.எஸ் தரப்பு இருந்தது. அவரால் போதிய எண்ணிக்கையை ஆளுநரிடம் காட்ட முடியவில்லை. கூவத்தூரில் உள்ளவர்களை சுதந்திரமாக வெளியே விட்டால், சட்டசபையில் எனக்கே அவர்கள் ஆதரவு தருவார்கள் என்று ஓ.பி.எஸ் தரப்பு கூறி வந்தது.
அதன் அடிப்படையிலும், தான் முதல்வராக இருப்பதால் எனக்கே முதலில் சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆளுநருக்கு கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அதை ஆளுநர் ஏற்கவில்லை. எடப்பாடிக்கு முதல் சான்ஸ் கொடுத்து விட்டார்.
Comments
English summary
CM O Panneerselvam has sought the Governor to give him the first chance to prove his majority in the assembly.
Story first published: Thursday, February 16, 2017, 12:28 [IST]