நடராஜனின் இடையூறு நாட்டு மக்களுக்குத் தெரியும்.. போட்டு உடைத்த ஓ.பி.எஸ்!
நடராஜனின் இடையூறு நாட்டு மக்களுக்குத் தெரியும் என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
சென்னை: சசிகலாவின் கணவர் நடராஜன் செய்து வரும் இடையூறு எந்த அளவுக்கு இருக்கிறது என்பது நாட்டு மக்களுக்கே நன்றாக தெரியும் என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
சசிகலாவுக்கு எதிராக கிளர்ந்தெழுந்துள்ள முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று ஜெயலலிதா சமாதி அருகே செய்தியாளர்களைச் சந்தித்து குமுறினார். இன்றும் தனது இல்லத்தில் வைத்து செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது சசிகலா குறித்தும் அவரது குடும்பத்தினர் குறித்தும் அவர் பல குற்றச்சாட்டுக்களை வைத்தார்.
நடராஜனின் இடையூறு எந்த அளவிற்கு இருக்கிறது என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும் - CM
— திரு O. Pannerselvam (@CMOTamilNadu) February 8, 2017
நடராஜன் குறித்தும் முதல்வர் தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், நடராஜனின் இடையூறு எந்த அளவிற்கு இருக்கிறது என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும் என்றார் முதல்வர்.
விரைவில் அதிமுக பொதுச் செயலாளருக்கான தெர்தல் நடைபெறும் - CM
— திரு O. Pannerselvam (@CMOTamilNadu) February 8, 2017
முதல்வர் மேலும் கூறுகையில் விரைவில் அதிமுக பொதுச் செயலாளருக்கான தெர்தல் நடைபெறும் என்று தெரிவித்தார். இது முக்கியமாக கருதப்படுகிறது.
I will meet party cadre In every village. Probe commission to be headed by sitting judge - CM
— திரு O. Pannerselvam (@CMOTamilNadu) February 8, 2017
கிராமம் கிராமமாக மக்களை சந்திக்கப் போவதாகவும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்துத விசாரணை நடத்தப்படும் என்றும் முதல்வர் கூறியுள்ளார்.