தினகரன் ஆதரவு எம்பிக்களை தகுதிநீக்கம் செய்யுங்கள்.. வெங்கையா நாயுடுவிடம் ஓபிஎஸ் அணி மனு!
தினகரன் ஆதரவு எம்பிக்களை தகுதிநீக்கம் செய்யுமாறு துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவிடம் ஓபிஎஸ் அணியினர் மனு அளித்துள்ளனர்.
டெல்லி: தினகரன் ஆதரவு எம்பிக்களை தகுதிநீக்கம் செய்யுமாறு துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவிடம் ஓபிஎஸ் அணியினர் மனு அளித்துள்ளனர்.
தினகரனுக்கு ஆதரவாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக செயல்பட்ட 18 அதிமுக எம்எல்ஏக்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தினகரனுக்கு ஆதரவாக உள்ள மூன்று எம்பிக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என ஓபிஎஸ் அணியினர் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவிடம் மனு அளித்துள்ளனர். ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த எம்பி மைத்ரேயன், மனோஜ் பாண்டியன், முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி ஆகியோர் இன்று வெங்கையா நாயுடுவை சந்தித்து மனு அளித்தனர்.
தினகரன் ஆதரவு எம்பியான நவநீதகிருஷ்ணன், விஜிலா சத்யானந்த், கோகுலகிருஷ்ணனை தகுதி நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 3 பேரும் அதிமுகவில் இருந்து தினகரன் அணிக்கு தாவியதால் தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.