For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உறுப்புகள் 6 பேருக்கு தானம்

By Siva
Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரியில் மூளைச்சாவு அடைந்த 26 வயது பெண்ணின் உடல் உறுப்புகள் ஆறு பேருக்கு தானம் செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரேகா(26) கடந்த 18ம் தேதி சாலையை கடந்து செல்கையில் வேன் மோதி படுகாயம் காயம் அடைந்தார். அவர் புதுச்சேரியில் உள்ள பிஐஎம்எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திருமணமாகாத ரேகா கடந்த 20ம் தேதி மூளைச்சாவு அடைந்ததார். இதையடுத்து ரேகாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது தாயும், தாத்தாவும் முன் வந்தனர்.

Organs of brain-dead girl harvested, save six lives

ரேகாவின் இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள் ஆகியவை தானமாக அளிக்கப்பட்டது. ரேகாவின் இதயம் சென்னையில் உள்ள ஃபிரான்டியர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிக்கு அளிக்கப்பட்டது. கல்லீரல் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவருக்கு பொருத்தப்பட்டது.

சிறுநீரகங்கள் மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மற்றும் ஜிப்மர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவருக்கு அளிக்கப்பட்டது. கண்கள் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ரேகா ஸ்டாக் புரோக்கர் அலுவலகத்தில் பணிபுருந்து வந்துள்ளார். அவரது வருமானத்தை வைத்து தான் அவரது குடும்பம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Organs of a 26-year old brain dead woman was harvested and given to six people in Chennai and Puducherry.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X