பிக்பாஸ் பட்டம் வென்ற ஆரவ்வை ட்விட்டரில் வம்பிழுத்து லந்தடிக்கும் ஓவியா 'ஆர்மி'
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் ஓவியா ஆர்மிக்காரர்களின் எதிரியான ஆரவ் வெற்றி பெற கூடாது என்பதற்காக காத்திருந்தனர். எனினும் ஆரவ் வெற்றி பெற்றதை ஆர்மிக்காரர்கள் விரும்பவில்லை.
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற ஆரவின் டுவிட்டர் பக்கத்தில் அவருக்கு ஓவியா ஆர்மிக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவுடன் ஆரவ் நெருங்கி பழகினார். இதனால் இருவரும் காதலிப்பதாகவே தெரிந்தது. மேலும் சக போட்டியாளர்களும் இவர்கள் இருவரையும் கலாய்த்து வந்தனர். இந்நிலையில் திடீரென ஓவியாவை ஆரவ் தவிர்த்து வந்தார். ஓவியாவை தான் காதலிக்கவில்லை என்று ஆரவ் தெரிவித்துவிட்டார். இதனால் மனமுடை்நத ஓவியா, ஆரவை பார்க்க பிடிக்காமல் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகினார்.
பிக்பாஸ் வீட்டில் கடைசி வரை தங்கியிருந்த ஆரவ் நேற்று வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் தன்னை ஆதரித்து வெற்றி பெற செய்த ரசிகர்களுக்கு டுவிட்டரில் ஆரவ் நன்றி தெரிவித்தார். பிக்பாஸ் டைட்டிலை மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன் என்றார். இதற்கு ரசிகர்கள் டுவிட்டரில் பொங்கி எழுந்தனர்.
|
யார் வெற்றி?
நீங்கள் 100 நாள்கள் இருந்து டைட்டிலை வென்றுள்ளீர்கள். ஆனால் ஓவியாவோ வெறும் 40 நாள்களிலேயே அனைத்து வயதுடைய மக்களின் மனங்களையும் கவர்ந்து விட்டார். இப்போது சொல்லுங்கள் யார் சிறந்தவர் என்று?
|
ஓவியா மகிழ்ச்சி
நீங்கள் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டவுடன் ஓவியா முகத்தில் மகிழ்ச்சியை பாருங்கள் என்றார் இந்த வலைஞர்.
|
ஜூலி வெற்றியாளராக இருந்தாலும்
ஓவியாவின் இந்த சந்தோஷம் யார் வெற்றி பெற்றாலும் இருந்திருக்கும். இவ்வளவு ஏன் ஜூலி வெற்றி பெற்றாலும் ஓவியா இதே போல் மகிழ்ச்சி அடைவார்.
— Oviyaism (@Oviyaism) October 1, 2017 |
ஓவியாவின் டயலாக்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலியின் முகத்திரையை கிழித்த போது கமல் சில அறிவுரைகளை வழங்குவார். அப்போது ஓவியா சிரிப்பார். அதற்கு கமல் என்னவென்று கேட்டபோது என்ன சார் பன்றது.. எல்லாம் சிரிப்பாக இருக்கிறது என்பார்.அந்த டயலாக்கை ஆரவுக்கு கூறிய வலைஞர்.
|
மக்கள் மனதில் இல்லை என்பது தெளிவாகிறது
பிக்பாஸ் வெற்றியாளர் யார் என்று கமல்ஹாசன் அறிவிப்பதற்கு முன்னர் அங்கிருந்த பார்வையாளர்கள் சினேகன் என்று கூறியதில் இருந்து ஆரவ் மக்கள் மனதில் இல்லை என்பது தெரிகிறது.
|
கமலுக்கு மகிழ்ச்சி இல்லை
ஆரவுக்கு கோப்பையை கொடுத்தவுடன் அவருக்கே மகிழ்ச்சி இல்லை. கொடுத்துவிட்டு திரும்பி விட்டார் என்கிறார் இந்த வலைஞர்.