திருப்பூர் சென்ற ப.சிதம்பரம்.. கொல்லப்பட்ட சிவமூர்த்தி குடும்பத்தை சந்தித்து ஆறுதல்
கொல்லபட்ட தொழிலதிபர் சிவமூர்த்தி குடும்பத்தை சந்தித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்: கொல்லபட்ட தொழிலதிபர் சிவமூர்த்தி குடும்பத்தை சந்தித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி தொழில் செய்து வந்த சிவமூர்த்தி கொலை செய்யப்பட்டுள்ளார. இவர் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மனைவி நளினியின் தங்கை மருமகன் ஆவார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன் காணாமல் போன இவர் கொலை செய்யப்பட்டது இன்று கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவமும் தமிழகம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீஸ் தீவிரமாக விசாரித்து வருகிறது.
திருப்பூர் சிவமூர்த்தியின் உடல் ஓசூர் கெலவரப்பள்ளி அருகே மீட்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உடல் திருப்பூரில் உள்ள கருமாரம்பாளையத்தில் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில் தற்போது கொல்லபட்ட தொழிலதிபர் சிவமூர்த்தி குடும்பத்தை சந்தித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆறுதல் தெரிவித்துள்ளார். திருப்பூரில் உள்ள சிவமூர்த்தி வீட்டி ற்கு ப.சிதம்பரம் சென்றுள்ளார்.