’என்னாது.. ஒரு காபி விலை 180 ரூபாய், டீ விலை 135 ரூபாயா... ’ : அதிர்ச்சியடைந்த ப.சிதம்பரம்
சென்னை விமானநிலையத்தில் விற்கப்படும் டீ,காபி விலையைக் கேட்டு அதிர்ச்சியடந்ததாக ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Recommended Video
சென்னை : சென்னை விமான நிலையத்தில் டீ, காபி விலையைக் கேட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் அதிர்ந்து போய் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சென்னை விமான நிலையத்தில் உள்ள காபி டே கடையில் டீ கேட்டபோது, சுடு தண்ணீரையும், டீத்தூளையும் தனித்தனியாக கொடுத்தார்கள். அதற்கு 135 ரூபாய் விலை சொன்னார்கள். நான் அதிர்ந்து போய் டீ வேண்டாமென்று மறுத்துவிட்டேன். நான் செய்தது சரியா தவறா ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
At Chennai Airport Coffee Day I asked for tea. Offered hot water and tea bag, price Rs 135. Horrified, I declined. Was I right or wrong?
— P. Chidambaram (@PChidambaram_IN) March 25, 2018
மேலும், மற்றொரு பதிவில், காபி விலையைக் கேட்டேன் 180 ரூபாய் என்று பதில் வந்தது. யார் இதை வாங்குவார்கள் என்றதற்கு, அவர்கள் 'பலர்' என்று பதில் அளித்தனர். அப்போது, நான் பழையவனாகிவிட்டோனோ ? என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.
Coffee Rs 180. I asked who buys it? Answer was 'many'. Am I outdated?
— P. Chidambaram (@PChidambaram_IN) March 25, 2018
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ஒருவர், இவ்வாறு பதிவிட்டு இருப்பது ட்விட்டரில் வைரலாகி வருகிறது. பலரும் இதை ரீட்வீட் செய்துவருகிறார்கள்.