பெட்ரோல், டீசல் விலை எந்த காலத்திலும் விற்காத விலைக்கு விற்பனை... ப.சிதம்பரம் கண்டனம்
பெட்ரோல், டீசல் விலை எந்த காலத்திலும் விற்காத விலைக்கு விற்கப்படுகின்றன என்று ப.சிதம்பரம் தெரிவித்தார்.
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த காலத்திலும் விற்காத விலைக்கு விற்கப்படுவதாக முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.
அண்மைகாலமாக பெட்ரோல், டீசலின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல் , டீசல் விலையுயர்வை திரும்ப பெற வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இதுகுறித்து ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், எண்ணெய் என்பது இந்திய பொருளாதாரத்தின் முக்கிய காரணியாகும். 80 சதவீத எண்ணெய் உற்பத்தியை இந்தியா சார்ந்துள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் மத்திய அரசு பட்ஜெட்டும் அதன் அடிப்படையில் குறைந்த அளவில் இருந்தது.
குறைவான எண்ணெய் விலை வரியை வாடிக்கையாளர்கள் தலையில் கட்டுவதற்கு பாஜக கூட்டணி அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு வழிகோலியது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையுயர்வு சுமை மக்கள் மீது ஏற்றப்பட்டுவிட்டது. 4 ஆண்டு பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல் மீது சுமத்தப்பட்ட கூடுதல் வரிச்சுமை ரூ 6 லட்சம் கோடி ஆகும்.
4. Look at the revenues collected by the Central government and state governments in recent years from taxes on petrol and diesel (see table). pic.twitter.com/Aq0dOsO6BY
— P. Chidambaram (@PChidambaram_IN) April 29, 2018
பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்திருக்கிறது. ஆனால் மக்களுக்கு கொஞ்சம் கூட நிவாரணம் கிடையாது. ரூ 6 லட்சம் கோடியில் ஒரு பகுதியை நிவாரணமாக மக்களுக்குத் தந்திருக்க வேண்டுமா இல்லையா?
நான்கு ஆண்டு பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல் மீது சுமத்தப்பட்ட கூடுதல் வரிச்சுமை ரூ 6 லட்சம் கோடி.
— P. Chidambaram (@PChidambaram_IN) April 29, 2018
கச்சா எண்ணை விலை குறைகிறது, ஆனால் மக்களுக்கு வரிச்சுமை கூடுகிறது. இன்று பெட்ரோல், டீசல் எந்தக் காலத்திலும் இல்லாத விலைக்கு விற்கின்றன என்று தனது டுவிட்டரில் ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.