For Daily Alerts
Just In
கொட்டிய மழை... பழநி முருகன் கோயில் படிகளில் அருவி .... பக்தர்கள் மகிழ்ச்சி: வீடியோ
பழநி முருகன் திருக்கோயிலில் மழை நீர் படிகளில் அருவி போல் ஓடியதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திண்டுக்கல்: பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்துவருவதால் பழனி மலை தண்டாயுதபாணி திருக்கோயிலின் படிகளில் நீர் வழிந்தோடுவது அருவி போல் காட்சியளிப்பதால் பொதுமக்களும் பக்தர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. மதுரை, திருநெல்வேலி, தேனி, விழுப்புரம் கிருஷ்ணகிரி, திண்டுக்கல உள்ளிட்ட பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், பழனி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்தது. மேலும், பழனி மலையில் மழை பெய்ததால் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு செல்லும் பாதையான பல நூறு படிகளில் மழைநீர் அழகாக தவழ்ந்து வழிந்தோடுகிறது.
இது அருவி தவழ்ந்தோடி வருவது போல் காட்சி அளிக்கிறது. அதனால் இதனைக் காணும் பக்தர்கள் 'படி அருவி'யில் கால் நனைத்து மகிழ்ந்தனர்.
English summary
In Palani murugan temple rain water made the stair steps into falls and devotees enjoying it