For Daily Alerts
Just In
மதுரையில் இருந்து சென்னைவரும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில்பெட்டி தடம்புரண்டது- பயணிகள் அவதி
பாண்டியன் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டதால் பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.
மதுரை: பணிமனையில் இருந்து நடைமேடைக்கு வந்த பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு பெட்டி தடம்புரண்டதால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் 3 மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டது.
நேற்று 8 மணியளவில், பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் 21 பெட்டிகளை இணைத்து முதலாவது நடைமேடைக்கு கொண்டுவரும் பணி நடைபெற்றது.
அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு பெட்டி தண்டவாளத்தில் தடம் புரண்டது. ஆனால் ஓட்டுநர் சாதுர்யமாக ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் எப்போதுமே கூட்டம் அதிகரித்து காணப்படும். தடம்புரண்டதால் சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
பின்னர் தண்டவாளத்திற்கு ரயில் கொண்டுவர 3 மணி நேரமானதால் ஏராளமான பயணிகள் ரயில் நிலையத்திலேயே காத்திருக்கும்நிலை ஏற்பட்டது. இதனால் குழந்தைகள், வயதானவர்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.
Comments
English summary
There was a box in the Pandian Express train that came from the workshop to the pedestrian, The train departed for 3 hours late. As a result, children and elderly people suffered severe pain.
Story first published: Monday, April 2, 2018, 10:58 [IST]