பாஜகவிடம் சரணடைந்த ஓபிஎஸ், ஈபிஎஸ்... சொல்வது சசிகலா
பாஜகவிடம் ஓபிஎஸ் சரணடைந்தார் என்கிறார் சசிகலா.
Recommended Video
சென்னை: பாரதிய ஜனதாவிடம் ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி சரணடைந்துவிட்டதாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளாராம் சசிகலா.
ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்து வருகிறது. இந்த ஆணையத்தின் முன்பாக சசிகலா தாக்கல் செய்ததாக கூறப்படும் வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதாவுக்கு போயஸ் முதல் அப்பல்லோ வரை நடந்தது என்ன என்பதை பற்றி சசிகலா இதில் விவரித்துள்ளார். மேலும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஓபிஎஸ் பாஜகவிடம் சரணடைந்துவிட்டார். அவரைத் தொடர்ந்து முதல்வரான எடப்பாடி பழனிசாமியும் பாஜகவிடம் சரணடைந்தார் எனவும் சசிகலா அதில் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சசிகலாவின் வாக்குமூலத்தில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி ஆகியோரது பெயர்களும் இடம்பெற்றிருக்கிறதாம்.