For Quick Alerts
For Daily Alerts
Just In
அது சரி... ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு துணை ராணுவம் வருதாம்.. "பாதுகாப்புக்கு"!
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பாதுகாப்புக்காக விரைவில் துணை ராணுவப் படை வருகிறது என சென்னையில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா பேட்டியளித்துள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் கேமராவுடன் 3 பறக்கும் படை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. செலவினப் பார்வையாளர் ராகுல் ரமன் நாளை மறுநாள் வர உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.
சுயேச்சை வேட்பாளரை ஆர்.கே.நகர்த் தொகுதியைச் சேர்ந்த 10 பேர் முன்மொழிய வேண்டும் என சக்சேனா அறிவுறுத்தியுள்ளார்.
பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிந்து பாதுகாப்பு அதிகரிக்கப்படும் எனவும் தமிழக தலைமைத் தேர்தல் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஆர்.கே. நகர்த் தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வாக்கு சேகரிப்பதில் அமைச்சர்கள் களம் இறங்கியுள்ளனர்.
Comments
English summary
Para military will be Deployed in R.K.Nagar by election. Says Tamilnadu Chief Electrol Officer Sadeep Saxena