திராவிட படையை வீழ்த்த விடுவோமா? #திராவிடம்50
திமுகவை உருவாக்கிய அண்ணா தமிழக முதல்வராகி 50 ஆண்டுகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இதனை டுவிட்டரில் இளைஞர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சென்னை: திராவிடத்தை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது என்று சவால் விட்டு பதிவிட்டு வருகின்றனர். திமுகவை உருவாக்கிய அண்ணா தமிழக முதல்வராகி 50 ஆண்டுகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இதனை டுவிட்டரில் இளைஞர்கள் கொண்டாடி வருகின்றனர்.
டுவிட்டரில் #திராவிடம் என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகி வருகிறது. அண்ணா தொடங்கி எடப்பாடி பழனிச்சாமி வரை கடந்த 50 ஆண்டுகாலமாக தமிழகத்தை திராவிட கட்சிகள்தான் ஆண்டு வருகின்றன.
அண்ணா முதல்வராக பதவியேற்ற இந்த நாளை திமுக கொண்டாடினாலும் திராவிட இயக்க இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர்.
|
அண்ணா உருவாக்கிய திமுக
அறிஞர் அண்ணா முதல்வராக பதவியேற்று 50 ஆண்டுகள் ஆகிவிட்டதை கொண்டாடுவதாக பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர்.
|
500 ஆண்டுகள் ஆனாலும் அழியாது
திமுக அழிந்து கொண்டிருக்கிறது, அதிமுக அழிந்து கொண்டிருக்கிறது என்று கூறி வரும் பொன். ராதாகிருஷ்ணனுக்காகவே இந்த பதிவு.
|
திராவிட கட்சிகள் அழியாது
திராவிட கட்சிகளை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்று சொல்லாமல் சொல்கிறது இந்த மீம்ஸ்
|
தமிழ்நாடு
தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்தவர் அண்ணா இது திராவிட ஆட்சியின் சாதனை என்கிறார் இந்த வலைஞர்.
|
இது திராவிடர் படை
இது திராவிடர் படை எந்த ஆரிய சக்தியாளும் அழிக்க முடியாது என்று பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர்.