'ம்..' 'ம்க்கும்' என்று மட்டுமே பதில் அளித்த ஜெயலலிதா...டிவி சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்!
மறைந்த முதல்வர் ஜெயலலிதா செப்டம்பர் 22ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது என்ன நிலையில் இருந்தார் என்ற அறிக்கையை டிவி சேனல் வெளியிட்டுள்ளது.
சென்னை : மறைந்த முதல்வர் ஜெயலலிதா செப்டம்பர் 22ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது என் நிலையில் இருந்தார் என்ற அறிக்கையை புதிய தலைமுறை டிவி சேனல் வெளியிட்டுள்ளது.
தமிழக செய்தி சேனல் ஒன்று ஓராண்டிற்கு முன்னர் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது என்ன நிலையில் இருந்தார் என்பதற்கான பேஷன்ட் கேர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ஜெயலலிதா என்ன நிலையில் செப்டம்பர் 22ம் தேதி மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது இருந்தார் என்பது தெரியவந்துள்ளது.
Recommended Video
சரியாக 10 மணியளவில் ஜெயலலிதாவிற்கு உடல்நிலை சரியில்லை என்று அப்பலோ மருத்துவமனைக்கு தொலைபேசியில் தெரியவைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இரவு 10.25 மணியளவில் ஆம்புலன்ஸ் வந்துள்ளது.
அதில் இருந்த முதலுதவி சிகிச்சையளிப்பவர்கள் போயஸ்கார்டனில் ஜெயலலிதா இல்லத்தில் முதல் தளத்தில் தனி அறையில் அவர் இருந்துள்ளார். மயங்கிய நிலையில் இருந்த ஜெயலலிதா ம், ம்கும் என்று மட்டுமே பதில் அளித்துள்ளார்.
இதனையடுத்தே அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அவருக்கு உடலில் சர்க்கரையின் அளவு 500க்கு மேல் இருந்ததும், செப்டம்பர் 22ம் தேதிக்கு முன்னரே 3 நாட்களாக தொடர்ந்து விட்டு விட்டு காய்ச்சலும், நுரையீரல் தொற்றும் இருந்துள்ளதும் அறிக்கையில் தெரியவந்துள்ளது.