நகைகளுடன் தலைமறைவாகிவிட்ட அடகு கடை உரிமையாளர்... அதிர்ச்சியில் மக்கள்! - வீடியோ
திருச்சி மணப்பாறையில் பொதுமக்கள் அடகு வைத்த நகைகளையும் பணத்தையும் எடுத்துக்கொண்டு நகைக்கடை உரிமையாளர் உதயக்குமார் மறைவாகியுள்ளார்.
திருச்சி: திருச்சி மணப்பாறையில் நகை அடகுக்கடை நடத்தி வந்த உதயகுமார் என்பவர் பல லட்சம் நகைகளுடன் தலைமறைவாகியுள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருச்சி மணப்பாறையில் உதயகுமார் என்பவர் நகை அடகுக்கடை நடத்தி வந்தார். அவரிடம் உள்ளூரிலிருந்த பொதுமக்கள் பலர் பல லட்சம் மதிப்புள்ள நகைகளை அடமானம் வைத்திருந்தார்கள்.
மக்களிடம் நிறைய நகைகளையும் பணத்தையும் பெற்றுக்கொண்டார். ஆனால் திடீரென ஒருநாள் அங்கிருந்து அவர் தலைமறைவாகிவிட்டார். பலநாட்கள் அவரைத் தேடி வந்த மக்கள் அவரை காணவில்லை என்று காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அதையடுத்து, காவல்துறையினர் அவர் மீது வழக்குப் பதிவுசெய்து அவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர். அங்கு பொதுமக்கள் அடகு வைத்த நகைகள் பல லட்சம் ரூபாயை தாண்டும் எனத் தெரிகிறது.அந்தநகைகளை எடுத்துக்கொண்டு அவர் தலைமறைவாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.