அடுத்தடுத்து பாதிப்படையும் எம்எல்ஏக்கள்.. பழனி தொகுதி திமுக எம்எல்ஏ செந்தில்குமாருக்கு கொரோனா
பழனி: பழனி திமுக எம்எல்ஏ செந்தில்குமாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் அடுத்தடுத்து அரசியல் தலைவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் மத்தியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதன்பின் தமிழகத்தில் ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்துக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
முன்னதாக தமிழ்கத்தில் வரிசையாக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் பலருக்கு கொரோனா ஏற்பட்டது. முன்னதாக திமுக எம்எல்ஏ கார்த்திகேயன். கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதி திமுக எம்எல்ஏ கணேசன், கிருஷ்ணகிரி தொகுதி திமுக எம்எல்ஏ செங்குட்டுவனுக்கு கொரோனா ஏற்பட்டது. அதிமுக எம்எல்ஏ நிலோபர் ஆகியோருக்கு கொரோனா ஏற்பட்டது.
அதன்பின் நாகர்கோவில் தொகுதி திமுக எம்எல்ஏ சுரேஷ்ராஜனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் தற்போது பழனி திமுக எம்எல்ஏ செந்தில்குமாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருக்கு தொற்று உறுதியானதால், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளார்.
கொரோனாவிற்காக நாடு முழுக்க இதுவரை 196 மருத்துவர்கள் பலி.. தமிழகத்தில்தான் அதிகம்.. ஷாக் ரிப்போர்ட்
மேலும் அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்.எல்.ஏ. பழனி, பரமக்குடி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ .சதன் பிரபாகரன், உளுந்தூர்பேட்டை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ குமரகுரு, கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன் (குணமாகிவிட்டார்) ஆகியோருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.