வணிகர் சங்க பிரமுகர்கள், பாதிரியார்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்திய தூத்துக்குடி கலெக்டர்
தூத்துக்குடியில் மாவட்ட கலெக்டர் தலைமையில் பல்வேறு தரப்பினருடன் நடைபெற்ற அமைதிக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
தூத்துக்குடி: மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்ற அமைதிக்குழு கூட்டம் நிறைவடைந்தது.
தூத்துக்குடியில் நேற்று முன்தினம் மற்றும் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில் அங்கு மீண்டும் இயல்பு நிலை திரும்பு வகையில் தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் அமைதிக் கூட்டம் நடைபெற்றது
இந்தக் கூட்டம் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் ககந்தீப் சிங் பேடி, டேவிதார் முன்னிலையில் நடைபெறுகிறது. தென் மண்டல ஐஜி, மாவட்ட எஸ்.பி. முரளி ரம்பா ஆகியோர் பங்கேற்றனர்.
நகர முக்கியப் பிரமுகர்கள், வணிகர் சங்க பிரமுகர்கள், பாதிரியார்கள் உள்பட 40 பேரும் பங்கேற்றனர். இந்தக் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
அப்போது கடைகளை திறப்பது மற்றும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது