குதூகலம்.. கோவை குற்றாலத்தில் குளிக்க அனுமதி.. உற்சாக குளியல் போட்ட சுற்றுலா பயணிகள்
ஒரு வாரத்திற்கு பின்னர் கோவை குற்றாலத்தில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கோவை: ஒரு வார கால தடைக்கு பின்னர் கோவை குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களாக நல்ல மழை பெய்தது வந்தது. இதனால் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்ட. சிறுவாணி அணை நிரம்பி வழிந்ததுடன், கோவை குற்றால அருவியிலும் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அத்துடன் பலத்த காற்றும் வீசியது. இதனால், பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்திருந்தனர்.
அதனால் கடந்த ஒரு வாரகாலமாக சுற்றுலா பயணிகள் யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், மழை படிப்படியாக குறைந்ததுடன், வெள்ளப்பெருக்கும் சீரானது.
மேலும் பராமரிப்பு பணிகளும் நிறைவடைந்து உள்ள இந்நிலையில், மீண்டும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். இதனால் மகிழ்ச்சியடைந்த சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல் போட்டு வருகின்றனர்.